நோய் மற்றும் மருந்துகள்
- firstlettercapital
- Aug 17, 2020
- 1 min read
கறிக்காக வளர்க்கும் காடைகள் 30 நாட்களுக்குள் விற்றுவிடுவதால், கோழிகளைபோல் நீண்ட நாட்கள் வளர்த்து பராமரிக்க தேவையில்லை. பொதுவாகவே காடைகளுக்கு நோய்தாக்கம் கோழிகளைவிட குறைவு. ஆனாலும், சரியான தீவனம், சுத்தமான தண்ணீர், கழிவுகள் அகற்றுதல்,சுகாதாரமான சூழல், குறிப்பிட்ட தருணங்களில் நுண்ணுயிரிகள் போன்றவை கொடுத்துவர வேண்டும்.
குறிப்பிட்டு சில நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. அத்தருனங்களில், ஒரு கால்நடை மருத்துவரை ஆலோசித்து அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை கொடுக்கவேண்டும். அதேசமயம், நோய் தொற்றுக்கான காரணம் கண்டறிந்து, அதனை நிவர்த்திசெய்ய வேண்டும், நோய் பரவாமலும் தடுக்கவேண்டும். இயற்க்கை மருத்துவமாயினும், கால்நடை மருத்துவரை ஆலோசித்து அவற்றை கொடுக்கவேண்டும். அவசர தேவைக்கு, செவிவழி ஆலோசனை நண்பர்களிடம் பெறும்போது, பலரிடம் கலந்துபேசி, நன்கு விசாரித்து முடிவெடுக்க வேண்டும். கால்நடை மருத்துவரின் ஆலோசனை நிச்சயம் மிகுந்த பலனைத்தரும்.

Comments