top of page

காடை தீவனம்

  • firstlettercapital
  • Aug 17, 2020
  • 1 min read

காடைகளின் வயதிற்கு ஏற்ப தீவனம் மாறுபடும். ஆரம்ப காலங்களில், உடல் எடை கூட புரதச்சத்து அதிகமாகவும், பருவமடைந்த பிறகு முட்டை ஓடுகளின் கனத்திற்காக சுண்ணாம்புச்சத்து அதிகமாகவும் கொடுக்க வேண்டும். சொந்தமாக தீவனம் உற்பத்தி செய்யமுனைபவர்கள், இதனில் கவனம்கொள்ள வேண்டும். சந்தைகளில் பல வகை கம்பெனி தீவனங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. சில கம்பெனிகளில் காடைகளுக்கென்றே தனியாக தீவனம் உள்ளன. அல்லது, கோழிகளுக்கான தீவனத்தையும் பயன்படுத்தலாம்.


ப்ரீ ஸ்டார்டர் தீவனத்தை, முதல் 10 நாட்களுக்கு, அதிகபச்சம் 30 நாட்கள் வரை கொடுத்துவரலாம். முடிந்தால் 10 முதல் 30 நாட்கள் வரை ஸ்டார்டர் என்னும் தீவனத்தை கொடுக்க வேண்டும். 30 நாட்களுக்கு பிறகு லேயர் தீவனம் கொடுக்க வேண்டும்.


புரதச்சத்தின் கலவை விகிதத்திற்கு ஏற்ப, தீவனத்தின் விலையும் இருக்கும். அதனால்தான் புரதச்சத்து மிகுந்த ப்ரீ ஸ்டார்டர் தீவனத்தின் விலை அதிகம், லேயர் தீவனத்தின் விலையோ சற்று குறைவு. அதற்காக, விலை அதிகம் உள்ள ப்ரீ ஸ்டார்டர் தீவனம் தொடர்ந்து கொடுத்தால் செலவு அதிகரிக்குமே தவிர, போதிய காலத்துக்கு பிறகு, அது வீண்விரையம் மட்டுமல்லாமல், கொழுப்பு மிகுந்து முட்டையிடும் தன்மையும் பாதிக்கும்.



1 commentaire


naomithiyagu
29 août 2023

வணக்கம் எனக்கு காடை தீவனம் சென்னையில் அம்பத்தூரில் நான் இருக்கிறேன். எங்கே கிடைக்கும்

J'aime
Post: Blog2_Post
bottom of page