top of page

காடை வளர்ப்பதற்கான இடவசதி

  • firstlettercapital
  • Aug 23, 2020
  • 1 min read

Updated: Aug 27, 2020

இன்றளவும் காடுகளில் அழிந்து வரும் ஓர் இனமாக காடைகள் இருப்பதால், அவற்றை வேட்டையாடுவதும், வளர்ப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவற்றின் மருத்துவ குணம் கருதி, கலப்பின முறையினால் உருவாக்கப்பட்ட, பண்ணைகளில் வளர்க்கக்கூடிய ஜப்பானிய காடை ரகங்கள் மட்டுமே வளர்க்க அனுமதி உண்டு. இவை நன்கு சுறுசுறுப்பபாக ஓடிக்கொண்டே இருப்பவை. பெரிய அளவு எடை கூடாதவை. சண்டையிடும் முரட்டு குனமும் உண்டு. இதனை கருத்தில் கொண்டு இவற்றை வளர்ப்பதற்கான இடவசதி முடிவு செய்யப்படுகிறது.


காடைகளை மேய்ச்சல் முறையில் கோழிகளை போல் வளர்க்கமுடியாது. முதல் 7-10 நாட்கள் புரூடிங் முடிந்த பிறகு, ஆழ்கூள முறையில் 30 நாட்கள் வளர்க்கலாம் அல்லது முடிந்தால் கூண்டு முறையில் வளர்க்கவும், பராமரிப்பு சுலபம். 30 நாட்களுக்கு பிறகு, கண்டிப்பாக கூண்டு முறையில் வளர்க்கவும், இல்லையேல் முட்டையின் திறன் பாதிக்கும்.


காடை குஞ்சுகள் மிகச்சிறிய அளவிலேயே இருக்கும் (8-13 கிராம்). அதனால், முதல் நாள் ஒரு சதுர அடிக்கு 10 காடைகள் விகிதம் வளர்க்க வேண்டும். அதன் எடை கூடக்கூட இந்த எண்ணிக்கையை சதுர அடிக்கு ஒவ்வொன்றாக குறைத்துக்கொண்டுவந்து, 30வது நாள் ஒரு சதுர அடிக்கு 5 காடைகள் விகிதம் வளர்க்க வேண்டும். பொதுவாகவே இவை சிறிது உயரம் பறக்கத்தெரிந்தவை. அவை நடமாட அதிக இடமிருந்தால், நன்கு சுறுசுறுப்பாக ஓடி, பறந்து எடை கூடுவதை குறைத்துவிடும், அடிபட்டு காயங்களும் உண்டாகும். மிக நெருக்கமாக இருந்தாலும் சண்டையிட்டு காயப்படுத்திக்கொள்ளும்.


உண்பதற்கான முட்டை உற்பத்தி செய்வதாய் இருந்தால், 30 நாட்களுக்கு மேல் பெண் காடைகளை மட்டும் ஒரு சதுர அடிக்கு அதிகபட்சம் 5 காடைகள் விகிதம் வளர்க்க வேண்டும். மிகப்பெரிய இடைவெளி இருந்தால் அதிக நடமாட்டத்தால் முட்டையிடும் திறன் பாதிக்கும்.


குஞ்சு பொறிப்பதற்கான முட்டை உற்பத்தி செய்வதாய் இருந்தால், 30 நாட்களுக்கு மேல், 3-4 பெண் காடைக்கு ஒரு ஆண் காடை (ஒரு இனை/குழு) என்று ஒரு சதுர அடிக்கு 4-5 காடை விகிதம் (ஒரு இனை/குழு) மட்டுமே வளர்க்க வேண்டும். மிக நெருக்கமாக இருந்தால் இனப்பெருக்க காலங்களில் சண்டையிட்டு காயப்படுத்திக்கொள்ளும். பெரிய இடைவெளி இருந்தால், முட்டையின் பொறிப்பு திறன் பாதிக்கும்.


Comments


Post: Blog2_Post
bottom of page