கலப்பினக் காடை
- firstlettercapital
- Aug 16, 2020
- 1 min read
நாமே காடைகளை உருவாக்க முற்படும்போது, காடைகளின் இனம் பற்றிய புரிதல் அவசியம். எடுத்துக்காட்டாக, ‘X’ என்ற காடை இனமும், ‘Y’ என்ற காடை இனமும் சேர்வதால் உருவாகும் காடையின் இனம் 50% ‘X’-ம், 50% ‘Y’-ம் உள்ள கலப்பின காடையாகவே உருவாகும். இனச்சேர்க்கையில், இரண்டு காடைகளும் ஒரே இனமாக இருந்தால்தான், அதன் மூலம் உருவாகும் காடையும் அதே இனமாக இருக்கும். ஒரு கூட்டமாக அதிக எண்ணிக்கையில் ஒருவர் காடை வளர்க்கையில், அதில் ஒரு காடையேனும் வேறு இனமாக இருந்து மற்றவை ஒரே இனமாக இருந்தாலும், அதனால் ஈன்றெடுக்கும் காடைகளில் சில கலப்பினமாக உருவாகும். அதனை சாதாரனமாக பிரித்து கண்டறிதல் கடினம். ஆய்வகங்களில் பரிசோதனை மூலமே அது சாத்தியப்படும்.
இதனால், அரசு குஞ்சு பொரிப்பகங்களில் விற்க்கப்படும் காடை குஞ்சுகளின் இனம் 100% உத்திரவாதமுள்ளதாக இருக்கும். தனியார் பண்ணைகளிலோ, தனிநபரிடமோ, கடைகளிலோ வாங்கும் காடை மற்றும் காடை குஞ்சுகளின் இனம், அவை சரியான இனம் அறிந்து பராமரித்து வளர்க்கும்விதம் சார்ந்தது.

Comentarios