top of page

எது தாய் காடை?

  • firstlettercapital
  • Aug 19, 2020
  • 2 min read

Updated: Aug 25, 2020

"நான் தாய் காடை வளர்க்க ஆசைப்படுகிறேன்..."

"நான் வளர்க்கும் தாய் காடைகள் முட்டை இடவில்லை..."

"நான் வளர்க்கும் தாய் காடைகளின் முட்டைகள் தரமாக இல்லை..."


அதிகமானோர் இப்படி சொல்லிவர...


...முதலில், எது தாய் காடை?


அனைத்து குஞ்சுகளும், வளர்ந்த பிறகு தரமான தாய் காடையாக மாறுமா?

எவ்வாறு தாய் காடைகளை தேர்வு செய்வது?

எப்படி தாய் காடைகளை உருவாக்குவது?

எப்படி தாய் காடைகளை பராமரிப்பது?


விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக காடை வளர்ப்பது, ஒன்று கறிக்காக மற்றொன்று முட்டைக்காக.தாய் காடை என்பது முட்டை பயன்பாட்டிற்காக வளர்க்கப்படுவது. அது உண்பதற்க்கான முட்டை, குஞ்சு பொறிப்பதற்க்கான முட்டை என இரு வகைப்படும். உண்பதற்க்கான முட்டை என்றால் பெண் காடை மட்டும் வளர்க்கவேண்டும். குஞ்சு பொறிப்பதற்க்கான முட்டை என்றால்தான் பெண் காடையோடு சேர்த்து ஆண் காடையும் வளர்க்கவேண்டும் (4 பெண் காடைக்கு, 1 ஆண் காடை என்ற விகிதத்தில்).


அப்படியானால், தாய் காடையின் தரத்தை பொருத்தே கீழ்கண்டவற்றின் தரமும் இருக்கும்:

  • முட்டையிட ஆரம்பிக்கும் நாள்

  • முட்டையின் எடை

  • முட்டை ஓடின் தன்மை

  • முட்டையிடும் எண்ணிக்கை

  • முட்டையிடும் காடையின் வாழ்நாள்

  • முட்டையின் குஞ்சு பொறிப்புத்திறன்

  • பொறித்த குஞ்சுகளின் தரம் மற்றும் அதன் தலைமுறையின் தரம்

இவ்வாறான முக்கியத்துவம் உள்ள தாய் காடை வளர்ப்பு என்பதே இத்தொழிலின் மிகச் சவாலான நிலையாகும். எனவேதான், தாய் காடை வளர்ப்பினை நுண்ணியமாக தெரிந்துகொள்ள வேண்டும்.


தாய் காடை உருவாக்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், முதலில் நல்ல ரகத்தை தேர்வு செய்யவேண்டும். தமிழ்நாட்டில், நந்தனம் காடை மற்றும் நாமக்கல் காடை ரகங்களின் குஞ்சுகள் TANUVAS மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. உங்கள் இடத்திற்கு குஞ்சுகளை எடுத்துசெல்லக்கூடிய வசதிக்கு ஏற்ப, TANUVAS மூலம் குஞ்சுகளை வாங்கிக்கொள்ளலாம். அல்லது, நம்பகத்தகுந்த தனிநபரிடமோ அல்லது பண்ணையிலோ நன்கு பராமரிக்கப்பட்ட முறையில் உருவான குஞ்சுகளை வாங்கிக்கொள்ளலாம்.


இவ்வாறு குஞ்சுகள் வாங்கும்போது, இரண்டு வழிமுறைகள் உண்டு. மலிவு விலையில் கிடைக்கும் கறிக்காடை குஞ்சுகளாக வாங்கலாம். அல்லது, விலை அதிகம் கொடுத்து தாய் காடை குஞ்சுகள் என்றும் வாங்கலாம். இந்த இரண்டு முறைகளிலும், அனைத்து குஞ்சுகளும், தாய் காடை ஆக முடியுமா என்றால், இயலாது. தாய் காடை குஞ்சுகளாக வாங்கி வளர்க்கையில், அதிக சதவிகிதம், தரமான தாய் காடைகளாக உருவாகும் (60%-70%). ஆனால், கறிக்காடை குஞ்சுகளாக வாங்கி வளர்க்கையில், மிக குறைந்த சதவிகிதமே தரமான தாய் காடைகளாக உருவாகும் (10%-15%). ஆகவே, இந்த இரண்டு வழிமுறைகளிலும், தேர்ச்சிபெறாத காடைகளை, 30-40 நாட்களில் கறிக்காக கொடுத்து கழித்துவிட வேண்டும், நஷ்டத்தை தவிர்க்கலாம்.


குஞ்சுகளை வளர்க்க ஆரம்பித்தது முதல், கீழ்கண்ட வழிமுறைகளை அதிக கவனத்துடன் பின்பற்ற வேண்டும்:

  • சரியான புரூடிங் முறைப்படி வளர்த்தல்

  • 4 வாரம் வரை ஆழ்கூளம் முறைப்படி வளர்த்தல்

  • தரைத்தளம் பராமரித்தல்

  • 4 வாரத்திற்கு பிறகு, கூண்டு முறைப்படி வளர்த்தல்

  • போதிய இடவசதி கொடுத்தல்

  • போதிய வெப்பம் கொடுத்தல்

  • தரமான தீவனம் கொடுத்தல்

  • போதிய அளவில் தீவனம் கொடுத்தல்

  • தகுந்த முறையில் தீவனம் கொடுத்தல்

  • வயதிற்கு எற்ற தீவனம் கொடுத்தல்

  • பருவத்திற்க்கு எற்ப தீவனத்தில் தேவையான அளவு மதிப்பு கூட்டுதல் (எடுத்துக்கட்டாக, சுண்ணாம்புச்சத்துக்காக கடலை புண்ணாக்கு, கிளிஞ்சள்கள் சேர்த்தல்)

  • நுண்ணுயிரி கலந்த சுத்தமான தண்ணீர் (கொதிக்கவைத்து ஆறவைத்தது) கொடுத்தல்

  • கழிவுகளை சரிவர அகற்றுதல்

  • நோய் ஏற்படாமல் பாதுகாத்தல்

  • நோய் தொற்று ஏற்படாமல் பராமரித்தல், தனிமைப்படுத்துதல்

  • கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, தேவைப்பட்டால் மருந்துகள் கொடுத்தல்

  • சுகாதரமான சுற்றம் பேனுதல்

  • அமைதியான சுற்றம் பேனுதல்

  • வெளி ஆட்கள் அருகில் நெருங்காமல் தவிர்த்தல்

  • சுற்றுச்சூழல் கால மாறுதலுக்கேற்றவாறு உள்கட்டமைப்பை பராமரித்தல்


தேர்வு செய்வது எப்படி?

  • அதிக எடை உள்ள முட்டைகளின் மூலம் பொறித்த குஞ்சுகளாக இருக்க வேண்டும்

  • 30 நாட்களில் அதிக எடை கூடிய காடைகள்

  • நன்கு தீவனம், தண்ணீர் உட்கொள்ளவேண்டும்

  • நோய் தொற்று அறவே கூடாது

  • காயப்பட்டிருக்கக் கூடாது

  • சுறுசுறுப்பான காடைகள் (குறிப்பாக ஆண் காடைகள் அதிக வீரியம் உள்ளதாக இருக்க வேண்டும்)

  • எந்த வகையான குஞ்சுகள் மூலம் உருவானது என்பதைப் பொருத்து சிறந்த காடைகளின் தேர்ச்சி சதவிகிதம் நிர்னயித்தல்

  • இனச்சேர்க்கைக்கு, ஒரு குழுவில் உள்ள ஆண் காடை, பெண் காடையைவிட 2 வாரம் வயது மூத்ததாக இருக்க வேண்டும்


தேர்ந்த தாய் காடைகளை பராமரித்தல்:

  • கலப்பினக் காடை தவிர்த்தல்

  • 4 வாரத்திற்கு பிறகு, கூண்டு முறைப்படி வளர்த்தல்

  • போதிய இடவசதி கொடுத்தல்

  • முட்டையிடும் காலங்களில், சரியான எண்ணிக்கையில் குழுவாக பிரித்து வளர்த்தல் (10 எண்ணிக்கையில்

  • முட்டையிடும் காலங்களில், சரியான விகிதத்தில் ஆண், பெண் எண்ணிக்கையில் வளர்த்தல்

  • முட்டையிடும் காடைகளுக்கு, 16 மணி நேர வெளிச்சம் கொடுத்தல்

  • முட்டையிடும் பருவத்தில் லேயர் தீவனம் கொடுத்தல்

  • முட்டையிடும் காடைகளுக்கு, புரதம் மிகுந்த தீவனத்தினால் கொழுப்பு மிகாமல் தவிர்த்தல்

  • ஆண் காடையின் வீரியம் கண்காணித்தல்

  • சுழற்ச்சி முறையில் ஆண் காடையினை வேறு குழுவுக்கு மாற்றுதல்

  • காடையின் ரகம் மற்றும் தரத்திற்க்கு ஏற்றார் போல், முட்டையிடும் ஆயுட்காலம் அறிந்து, பழைய காடைகளை கழித்தல்

  • பழைய காடைகளை கழித்த பிறகு, ஒரே தரமான காடைகளை புதிதாக சேர்த்தல்


மேற்க்கூறியவை அனைத்தும் ஒரு மேலோட்டமான எண்ணம் மட்டுமே, அவரவர், அனுபவம் பொருத்து இந்த கூற்றுகள் நீளும்.


Komentar


Post: Blog2_Post
bottom of page